பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


 எங்கும் பரந்து நிற்கும் ஒரே திரவியம் ஆகும். இதில் சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய முக்குணங்கள் இல்லை. எதிர், நிகழ், கழிவு என்ற கால நிலைகட்கு இதுவே காரணமாகும். இது விநாடி, நிமிடம், நாழிகை முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகள் இந்தக் காலத்தினுடையனவேயாகும். "நிமிடம் பதினைந்து கொண்டது காஷ்டை; காஷ்டை முப்பது கொண்டது கலை; கலை முப்பது கொண்டது முகூர்த்தம்; முகூர்த்தம் முப்பது கொண்டது நாள்; நாள் முப்பது கொண்டது மாதம்; மாதம் இரண்டு கொண்டது இருது; இருது மூன்று கொண்டது அயனம்; அயனம் இரண்டு கொண்டது. ஆண்டு...... பரார்த்தம்" இப்படி மனித ஆண்டு 360 கொண்டது ஒரு தேவயாண்டு. ஒரு தேவ ஆண்டு 1200 கொண்டது. ஒரு சதுர்யுகம். 71 சதுர்யுகம் கொண்டது ஒரு மந்வந்தரம். 14 மந்வந்தரம் கொண்டது 1000 சதுர்யுகம். இது நான்முகனுக்கு ஒரு பகல்; 2000 சதுர்யுகம் நான்முகனுக்கு ஒரு நாள். இந்த நாட்களால் மாதம் வருடங்களைப் பெருக்கி அந்த வருடங்கள் 100 ஆனால் நான்முகன் ஆயுள் முடியும். இதற்குப் பரம் என்று பெயர். இங்ங்னம் பல்வேறு வடிவங்களாகத் தோன்றக் கடவதாய், ஆதி அந்தம் அற்றதாய், ஈசுவரனுடைய உலகப் படைப்பு, அளிப்பு, அழிப்பு ஆகிய விளையாட்டுக் கருவியாய், ஈசுவரனுக்குச் சரீரமாக அமைந்து இருப்பது கால தத்துவம். இவ்வாறு காலத்தின் கூறுகளைப் பராசர பகவான் விஷ்ணு புராணத்தில் பேசுவர். ஆதியும் அந்தமும் இல்லாத இக் கால நியமத்திற்கு உட்பட்டே இக்கர்ம லோகத்திலுள்ள மாறுபாடுகள் எல்லாம் எம்பெருமானின் சங்கற்பத்தினால், நடைபெறுகின்றன. காலம் நித்திய விபூதியில் (பரமபதத்தில்) நித்தியம்: இந்த லீலா விபூதியில் (நம் உலகில்) அநித்தியம். அதாவது பரமபதத்தில் காலம் நடையாடாது; இறப்பு, எதிர்ப்பு, நிகழ்வு என்ற நிலை அங்கு இல்லை; ஆகவே நித்தியம்’ ஆனால் முன், பின் என்ற அளவிற்கு வேறுபாடு உண்டு. ஆயினும் அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் எம்பெருமானது சங்கல்பத்தினால் மட்டும் நடைபெறுவனவாகும். இந்த உலகில் இது அநித்தியமானதால் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற பேச்சுக்கு இடம் உண்டு. இந்தக் கால தத்துவம் ஈசுவரனுடைய படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய், அவனுடைய