பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

157


இவை உருவத்திலும் தன்மையிலும் தொடக்கத்திலிருந்த ஒற்றையணுவைப் போன்றே சிறிதும் மாறுதலின்றி உள்ளன. இந்த இரண்டு உயிரணுக்களும் முறையே ஒவ்வொன்றும் இரண்டாகப் பிளந்து கொண்டு மொத்தம் நான்கு உயிரணுக்களாக மாறுகின்றன. இந்த நான்கு உயிரணுக்களும் உருவத்திலும் தன்மையிலும் ஒன்றைப் போன்றே அமைந்துள்ளன. இந்த நான்கு உயிரணுக்களும் எட்டாகின்றன. இங்ஙனம் தொடர்ந்து இரட்டித்துக் கொண்டே உயிரணுப் பிரிவு நடைபெறுகின்றது. இவ்வாறு எண்ணிக்கையில் அதிகரித்துப் போகும் பொழுது- தொடக்கத்தில் பிரியும் அணுக்கள் ஏறக்குறைய ஒரே அளவாக இருப்பினும், -சில உயிரணுக்கள் உருவத்தில் பெரியனவாகவும், சில சிறியனவாகவும் அமைந்து விடுகின்றன. ஆனால் குணத்திலும் அமைப்பின் தன்மையிலும் எல்லா அணுக்களும் ஒன்றுபோல சிறிதும் வேற்றுமையின்றியே உள்ளன. ஒன்று இரண்டாகி, நான்காகி, எட்டாகி இவ்வாறு பல்கிப் பெருகிப் போகும் அணுக்கள் இரண்டு வாரக்காலத்தில் கோடிக்கணக்கானவைகளாகி ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு சிறு பந்து போன்ற தோற்றத்தை அடைகின்றன. அணுக்களால் நிரம்பின கருவினைக் 'கருப்பங்து’ என்று வழங்குவர். இந்நிலையில்தான் அது கருக்குழலிலிருந்து கருப்பையை அடைகின்றது. இதன் அளவு அப்பொழுது ஒரு குண்டூசியின் தலையளவு இருக்கும். கருவுற்றது தொடங்கி 15 நாட்கள் வரையிலும் (இரண்டு வாரம் வரையிலும்) முட்டை கருப்பையில் ஒட்டாமலேயே வளர்ந்து வருகின்றது. இப்பருவம் கருவின் முளைநிலை (Germimal Stage) அல்லது முதல் சூல்நிலை என்று வழங்கப் பெறுகின்றது.

இரண்டு வாரத்திற்குப் பிறகு கருப்பையில் கரு ஒட்டிக் கொள்ளுகின்றது. ஒட்டிக் கொள்ளும் இடத்தில்தான் நஞ்சும் (Placenta) கொப்பூழ்க்கொடியும் (Umbilica cord) வளர்கின்றன. கொப்பூழ்க் கொடியின் மூலந்தான் கரு தாயினிடமிருந்து உணவூட்டம் பெறுகின்றது. இதுவே இரண்டாம் நிலை; இது பிண்டநிலை அல்லது இளஞ்சூல்கிலை (Embryonic stage) எனப் பெயர் பெறும். இந்நிலையில் முளைச் சூல் உருவம் பெறாது. இரண்டு திங்கள் வரை வளர்ந்து வருகின்றது. இரண்டாவது நிலையின் தொடக்கத்தில் பந்து பேர்ல் உருவம் பெற்ற