பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கருப்பத்திலுள்ள எல்லா அணுக்களும் 'சிசு' அல்லது முது சூல் கிலை (Foetic stage) என்ற மூன்றாம் நிலையை அடைந்து விடுவதில்லை. அவற்றில் சில அணுக்கள் மற்றவைகளினின்றும் பிரிந்து குழந்தையின் உடலை அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றன. மிகத் தொடக்க நிலையில் மூன்று அடுக்குகளில் (புரைகளில்) உயிரணுக்கள் அமைகின்றன. அவை அமைப்பிலும் உருவத்திலும் பாகுபாடு அடைகின்றன. வெளிப்புரையிலிருந்து தோல், மயிர், நகம் முதலியவை தோன்றுகின்றன. நடுப்புரையிலிருந்து தசைகள், குருதிக்குழல்கள், எலும்புகள் முதலியவை உண்டாகின்றன. உட்புரையிலிருந்து உணவுக்குழல் நுரையீரல் (Lungs) முதலியவை உண்டாகின்றன. இந்தச் செயல்கள்யாவும் மிகவும் சிக்கலானவை; கருவளர்ச்சியியல் நிபுணர்கள் கூட அவற்றை முழுவதும் புரிந்து கொண்டதாக ஒப்புக் கொள்வதில்லை. இரண்டாம் திங்கள் இறுதியில் ஆதிநரம்பு மண்டலம், அரை குறையான கண்கள், காதுகள், வளரப் போகும் எலும்புகள், தசைகள், கைகால்கள் ஆகியவை அமைகின்றன. நான்காவது வார இறுதியில் இது கால் அங்குல நீளம் உள்ளது. இரண்டாவது திங்கள் இடையிலும் மானிட இளஞ்சூல் ஏனைய பாலுண்ணிகளின் (Mammals) கருவைப் போலவே உள்ளது. அதனிடம் செவுள்கள் (Gills) காணப் பெறுகின்றன. அது பாய்மம் நிரம்பிய பையில் வாழ்கின்றது. இதுதான் 'பனிக்குடம்' என்பது. இப்பொழுது அதற்கு ஒரு வாலும் உண்டு. அஃது இரண்டாவது திங்களின் இறுதிக்குப் பிறகுதான் மறைகின்றது. எட்டாம் வார இறுதியில் அது முக்கால் அங்குல நீளம் உள்ளது. இப்பொழுதுதான் உருவ அடையாளங்கள் காணத் தொடங்குகின்றன.இதன் பிறகு குழந்தை பிறக்கும் வரைஉள்ளது முதுசூல் கிலை ஆகும்.

இந்த நிலையில் உடலை விடப் பெரிதான தலை, முகஅடையாளங்கள், கைகால்கள் முதலியவற்றை தெளிவாகக் காணலாம். பதினாறாவது வாரத்தில் சிசு சுமார் ஆறரை அங்குல நீளமும் இரண்டு அவுன்சு எடையும் பெறுகின்றது. இப்பொழுது அது திட்டமான மனித வடிவத்தை அடைகின்றது. விரல்களும் பெருவிரல்களும் தனியாகப் பிரித்து மிருதுவான நகங்களைப் பெறுகின்றன. இப்பொழுது புறப்பிறப்புறுப்புகளும் புலனா-