பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கின்றது. ஆனால் விரைவில் குருதி ஒழுக்கு நின்று போகின்றது. இது 'பின்னிலைப்பிரசவம்' (After birth) என்றுவழங்கப்பெறும். கருப்பை நஞ்சை வெளிப்படுத்திய பிறகு மிகவும் கடினமாகிச் சிறுத்துச் சுருங்கி விடுகின்றது. பிரசவம் ஆனவுடன் சுமார் இரண்டுபவுண்டு எடையுள்ள கருப்பை ஆறாவது வார இறுதியில் இரண்டு அவுன்சாகக் குறைந்து விடுகின்றது. இப்பொழுது அதனைக் கை வைத்துப் பார்த்து உணரமுடிவதில்லை. ஒரு பெரிய குழந்தையைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு. இருந்த கருப்பை பிரசவம் முடிந்ததும் ஒரு கைமுட்டியின் பரிமாணத்திற்குக் கல்போன்று கடினமாகச் சிறுத்து விடுவது வியப்பினும் வியப்பன்றோ? ஒரு குழந்தை வெளிப்படுவதற்குக் கருப்பை சுமார் 135 தடவைகள் சுருங்கி விரிவதாகச் சில மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர். பிரசவத்தில் ஏற்படும் கோளாறுகள், குழந்தையிடம் நேரிடும் கோளாறு, ஆசன உதயம் (Breech presentation) சிசேரியன் அறுவை முறை, ஆயுதப்பிரசவம் போன்ற பல செய்திகளை விளக்க நேரம் இல்லை.16

2. ஆனா? பெண்ணா?: ஒருவருக்குப் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறுதியிடும் கூறினை ஈண்டு விளக்குவேன். ஒவ்வோர் உயிரணுவிலும் நிறக் கோல்கள் (Chromosomes) எனப்படும் பொருள்கள் அடங்கியுள்ளன. மானிட உயிரணுவில் இணை நிறக் கோல்கள் உள்ளன. ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒன்று தாயின் வழியாகவும், மற்றொன்று தந்தை வழியாகவும் வந்தவையாகும். ஆண், பெண் என்ற இருபாலாருடைய உயிரணுக்களிலுள்ள நிற்க்கோல்களில் 22 இணைகள் ஒரே மாதிரியாக இருக்கும். பெண் மக்களுள் 23-வது இணையிலுள்ள நிறக்கோள்கள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். அவற்றை X X என்பர். ஆனால் ஆண் மக்களுள் 23-வது இணையில் ஒன்று பெண் மக்களுடைய திறக்கோலைப் போலும், மற்றது சிறிதாகவும் இருக்கும்;சிறியதை Y நிறக்கோல் என்றும்,மற்றதை X நிறக்கோல்கள் என்றும் வழங்குவர், எனவே, ஆணின் உடலிலுள்ள உயிரணுக்களில் 22 இணை-


16. 'இல்லறநெறி' (தமிழ்ப்புத்தகாலயம், சென்னை - 5)

என்ற என் நூலில் (கடிதம் -19) விரிவாக விளக்கப்
பெற்றுள்ளது. ஆண்டுக் கண்டு தெளிக.