பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


டுள்ளன. சூரியனும் அதன் பரிவாரமான கோள்களும் வெட்ட வெளியில் சுற்றிக் கொண்டுள்ளன. இதைப் போலவே எத்தனையோ சூரியர்கள், விண்மீன்கள் போல் காட்டிக் கொண்டு வானவெளியில் சுற்றிக் கொண்டுள்ளனர். பூமியின் சுற்றளவு 25000 மைல். இவ்வளவு பெரிய உடம்பைத் துர்க்கிக் கொண்டு மனோ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டே உள்ளது பூமி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் ஒன்பது கோடி மைல். பூமி சூரியனைச் சுற்றும் சுற்றுவழியின் தொலைவு 54 கோடி மைல். ஒரு சுற்று வழி முடிய ஒர் ஆண்டுக் காலம் ஆகின்றது. பூமியைப் போலப் பல அண்டங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனும் அதன் பரிவாரமான கோள்களும் எட்டாத வெட்டவெளியில் சுற்றிக் கொண்டுள்ளன. இவற்றைப் போல எத்தனை எத்தனையோ சூரியர்கள் விண்மீன்கள் போல் காட்டிக் கொண்டு வானவெளியில் வட்டமாகச் சுற்றிக்கொண்டே உள்ளனர். இவர்கள் ஒரு கணக்குப்படி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் சுற்றுகின்றனர். இவ்வாறு சலியாமல் சுற்றும் அண்டங்களும் பிரம்மாண்டங்களும் கவிஞர் கண்ணுக்கு உருளைகள் அல்லது சக்கரங்கள் போல் தோன்றுகின்றன; காட்சியளிக்கின்றன. இப்பேரண்டச் ச க் க ர ங் க ளை ஞாலத்திகிரி என்று வழங்குகின்றார் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் (திகிரி-சக்கரம், உருளை).

ஒவ்வொரு அண்டமும் சுற்றுவதுடன் ஒவ்வொரு அண்டத்திலுள்ள பொருள்களும் உருமாறி வட்டங்களாகச் சுற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, கடல்நீர் கதிரவன் வெப்ப்த்தால் ஆவியாக மாறுகிறது. நீராவி பூமிக்குப் பத்து மைல் உயரம் வரை சென்று குளிர்ந்து இறுகி முகிலாக உருவமடைகின்றது. இந்த மேகம் சூல்கொண்டு இருண்டு கறுத்து மழையாகப் பொழிகின்றது; இந்த நீர் ஆறாகப் பாய்ந்து கடலோடு - சங்கமம் ஆகின்றது. மீண்டும் சக்கரம் சுழல்கின்றது; ஆவி மேகம்-மழை-கடல் என்று சுழன்று வருகின்றது. இவ்வாறு வட்டவளையமாகச் சுற்றும் இயக்கத்தை முதுநீர்த்திகிரி என்று வழங்குகின்றார் அய்யங்கார் (முதுநீர் கடல்நீர்).முதுநீர்ச்சக்கரத்தைப்போலவே பருவச்சக்கரமும் சுழல்கின்றது-இளவேனில், முதுவேனில், கார்