பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் அன்றும்

63



இந்த அரிப்பு சில சமயம் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்குவதுடன் காம உணர்ச்சிகளையும் தூண்டி விடுகின்றது. இந்த உணர்ச்சிகள் மிகத் தீவிரமாக எழுவதால் இவற்றிற்கு இணை விழைச்சினைத் தவிர வேறு மருந்தே இல்லை. மேலும் இயல்பாகவே காமக்களியாட்டத்தை நாடும் பெண்களிடம் தம்மிடம் பால் வாழ்க்கை முடியப் போகின்றது என்ற அச்சம், இனிமேல் கருப்பம் ஏற்படாது என்ற துணிச்சலான எண்ணம், அதனால்தாம் அதிகமாகக் கலவி புரியலாம் என்ற சுதந்திர உணர்வு ஆகியவை அதிகமான காமக்கிளர்ச்சிக்குக் காரணங்களாகும். இங்ஙனம் அதிகமான பால் விழைவு பெண்ணிடம் ஏற்படுவதற்கு நேர்மாறான மாற்றம் கணவனிடம் காணப்படுகின்றது. மனைவியை விட சில ஆண்டுகள் மூத்தவனாக இருப்பதனாலும், முன்னைய ஆண்டுகளை விட இப்பொழுது அவனிடம் ஆண் தன்மை சற்றுக் குறைந்திருப்பதாலும் இல்வாழ்க்கை இன்பத்தையே குலைப்பதற்கான பேரிடர்- அவலவிளைவு-காத்துக் கொண்டுள்ளது.

சிலரது எல்லை மீறிய செயல் : உளவியலை அறியாதோரும் பெண்ணின் உட்லழகு அவளது உளவாழ்க்கையில் பெரும் பங்கு பெறுகின்றது என்பதை நன்கு அறிவர். சூதக ஒய்விற்குப் பின்னர் தமது அழகெல்லாம் பறிபோகும் என்ற எண்ணமும், வயது ஆகிக்கொண்டுள்ளது என்ற கவலையும் பெண்ணின் மனத்தில் குடிகொள்ளுகின்றன. இந்த எண்ணங்கள் அவளிடம் புதிய மனப்பான்மையைத் தோற்றுவிக்கின்றன; இதன் விளைவு பயங்கர வடிவெடுக்கின்றது. வயது வந்த பலருக்குத் தாயாக ஆனபின்னரும், சில பெண்களிடம் தோற்றத்திலும் ஆடை அணிவதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்ற மட்டு மீறிய ஆவல் திடீரென்று தோன்றுகின்றது. இஃது அவளது உள்ளத்தில் காமஇச்சை மறையப்போகின்றதே என்ற நனவிலி அல்லது நனவுப் போராட்டத்தின் அறிகுறியாகும். நனவிலி உள்ளத்தைப் பற்றிய கருத்தின் ஒளி பல உண்மைகளை வெளிக்காட்டுகின்றன. இதனை அடுத்த பொழிவில் நாளை தெரிவிப்பேன்.

பல பெண்கள் இப்பருவத்தில் ஏளனத்திற்கு அல்லது ஆபத்திற்குக் காரணமாகும் அளவிற்கு எல்லை மீறிப்