பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழில் அறிவியல் செல்வம் மனிதனின் தோற்றம் அரிதரிது மானிடராதல் அரிது என்று தத்துவம் கூறும். இதனை அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளுதல் உயிரியல் நோக்கில் அறிந்து கொள்ளுதலாகும். ஆணும் பெண்ணும் மருவுதலால் மானிடக் கரு உண்டாகின்றது என்பதை நாம் அறிவோம். ஆணிடத்தில் உண்டாகும் விந்தனுவும் (Sperm cell) பெண்ணிடத்து உண்டாகும். முட்டையணுவும் (Egg cell) சேர்ந்தே இக்கரு உண்டாகின்றது. விந்தணு பருவம் அடைந்த (Adolescartperiod) ஆணிடம் உண்டாவது, அங்ங்னமே முட்டையணு பருவம் அடைந்த (Pubertழி பெண்ணிடம் உண்டாவது ஒரு துளி விந்துவில் இலட்சக்கணக்கான விந்தணுக்கள் இருக்கும். ஆனால் முட்டை சாதாரணமாக ஒருமாதத்திறகு ஒன்றுதான் வெளிப்படுகின்றது. தம்பதிகளின் கலவிக்குப் பிறகு விந்தனுக்கள் யோனி, கருப்பை இவற்றின் வழியாகக் கருக்குழலை (Fellopiantube நோக்கி நீந்திச் செல்லும்பொழுது கருப்பையை நோக்கி கருக்குழல் மூலம் வந்து கொண்டிருக்கும் முதிர்ச்சியுற்ற முட்டையணுவைச் சந்திக்கும் யாதானும் ஒரு விந்தனு முட்டையைத் துளைத்துச் சென்று அதனைக் கருவுறச் செய்யும். இதுவே கருவுற்ற முட்டை {Fertiiised ovum] aTéìugy. இதனை இல்லறநெறி என்ற என் நூலில் சுவையாக விளக்கியுள்ளேன். கண்ணுக்குப் புலனாகாத நுண்ணணு உலகங்களிலும் ஆனே பெண்ணை நாடிச் செல்வதும், து. வ அதிகமாக இயங்குவதும் நம்மை வியப்படையச் செய்கின்றன. காதல் உலகிலும் கலவி புரியும் செயலிலும் ஆண்கள் தாமே அதிகமாக இயங்குகின்றனர். பெண் தானே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் இணைகின்றான்? முட்டையிலும் தேர்ந்தெடுக்கும் திறன் ற்கையிலேயே அமைந்து கிடக்கின்றது. போட்டி போட்டுக் கொண்டு தன்ன்ை நோக்கிவரும் விந்தணுக்கள் தன்னுள் நுழைவதற்கேற்ற சாதகமான வாய்ப்புடன்