பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 97 முட்டையின் சிறு அறைகளாலமைந்த மென்றோல் (Cellular Membrane) விரிந்த நிலையிலுள்ளது. ஒரு வன்மையான விந்தணு உள்நுழைந்ததும் வேறு அணுக்களுக்கு இடம் கொடாது முட்டை தன் மென்றோலைச் சுருக்கிக் கொள்ளுகின்றது. ஆண்டவன் படைப்பின் விந்தையை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். பண்டையோர் திருமணத்தில் கயம்வரம் என்ற ஏற்பாட்டை அமைத்த முறையை எண்ணலாம். அர்ச்சுனன் ஒருவன்தானே மச்சக்குறியை வீழ்த்தி திரெளபதியை அடைய முடிந்தது? இன்றும் ஒருவருக்கு மணம் பேசி உறுதியான பிறகு அந்த வீட்டில் வேறு யாரும் பெண் பேச நுழைவதில்லையல்லவா?” அகப்பொருள் இலக்கியத்தில் அதிகமாக ஆண் பாத்திரத்தின் இயக்கத்தைத்தானே அதிகமாகக் காண முடிகின்றது? ஒதற்பிரிவு, காவல் பிரிவு, பொருள்வயிற் பிரிவு முதலியவற்றைச் சிந்தித்தால் இவ்வுண்மை தெளிவாகும். மானிடப் பிறப்பில் பங்குகொள்ளும் விந்தனுக்கள், முட்டையணுக்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுவேன். விந்தனுக்கள், ஆணிடம் உண்டாகும் விந்தணுக்களின் எண்ணிக்கைக்கு யாதொரு வரையறையும் இல்லை; அளவில்லாமல் இவை உண்டாகின்றன. ஒர் ஆடவன் புணர்சசியின் ஒவ்வொரு தடவையிலும் 200000000 இருநூறு இலட்சத்திலிருந்து) 500,000,000 (ஐந்நூறு இலட்சத்திற்கு) மேலும் விந்தணுக்களை வெளியேற்றுகின்றான். ஆயினும் தொடக்கத்திலிருந்தே அவனது இனப்பெருக்க உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவு படுவதில்லை. உடலிலிருக்கும் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் பொறியின்மப்பு செயற்படும் வரையிலும், உடல் அதற்குத் தேவையான பொருள்களைத் தரும் வரையிலும் இந்த விந்தனுக்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். 4 இல்லற நெறி - பக்103. கடிதம் 9