பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 101 வலியில் நிைைலமையான் வல்லுருவம் பெற்றம், புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” என்று கூறுவார். இதனைத் தெய்வப்பணியாகக் கருதிய பராசர முனிவர் வியாசப் பெருமான் தோன்றுவதற்குக் காரணமாயினார் என்று புராணங்கள் புகலும், ஆணுறுப்புகள் : இவை () விரைகள் (ii) எபிடிடைமஸ் (iii) விந்தேறு குழல் (t) புராஸ்டேட்சுரப்பி () விந்துப் பைகள் (ப) இலிங்கம் என்பவையாகும்.இவை யாவும் ஆணின் இனப் பெருக்க மண்டலத்தில் அடங்கும். இவற்றின் ஒவ்வொன்றின் அமைப்பையும் பயன்படும் முறையையும் விளக்குவேன். . 1. விரைகள் இவையே விந்தனுக்களை உண்டாக்கும் ஆதிமூலம் ஆகும். மனிதனிடம் வலப்புறம் ஒன்றும், இடப்புறம் ஒன்றுமாக இரண்டு விரைகள்" உள்ளன. இவை வழுவழுப்பான வெண்மை நிறமுள்ள முட்டை வடிவமான இரப்பர் போன்ற உறுப்புகளாகும். இவை கிட்டத்தட்ட கோழிமுட்டையின் பருமன் இருக்கும். இவை விரைப்பையில் (Serotயm) அமைந்துள்ளன. இந்த விரைப்பையில் இரண்டு விரைகளும் விந்து நரம்பு (spermatic cord) எனப்படும் ஒருவித நரம்பில் இலிங்கத்திற்குப் பின்புறமாகத் தொங்கிய நிலையில் உள்ளன. விந்தேறு குழலும் (Was deferens) அதனுடன் சேர்ந்து இணைந்துள்ள அமைப்புகளும் குருதிக் குழல்கள் ஊனீர்க் குழல்கள் (Lumphaticழesse) நரம்புகள் முதலியன) சேர்ந்தமைந்த தொகுதியே விந்து நரம்பு என வழங்கப் பெறுகின்றது. ஒவ்வொரு விரையும் கிட்டத்தட்ட V - 2 அங்குலம் நீளமுள்ளதாகவும், ஒர் அங்குல கனமுள்ளதாகவும் உள்ளது; அதன் எடை கிட்டத்தட்ட % அவுன்சு இருக்கும்; இந்த 5. குறள் - 273 கூடா ஒழுக்கம் - 6. விரை - வாசனை இதனைத்தருவது பூவிலுள்ள மகரந்தம் இது பூவினுள் உள்ள அண்டத்தைக் கருவுறச் செய்வது. ஆண் தன்மையுடையது. இச்செயலையொட்டியே செயற்படும் ஆண் விந்தணு உள்ள இடத்தை விரை என்ற பெயரால் குறித்தனர்.