பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 என்ற பாடல் நெஞ்சில் நின்றால் நலம் பயக்கும். 'எட்டுத்தொகை' என்னும் தொகுப்பில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலும் நூற்றுக்கணக்கான பாடல்களால் ஆனது. அவை, 1. 2. 3. 4. 5. 6. 7. 8. முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்பனவாம். நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் - கற்றறிந்தார் ஏத்தும் கவியோடு அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை. என்னும் வெண்பா படித்து இன்புறத்தக்கது. எந்நாட்டவர்க்கும் இறைவன் சிவனே என்ற உறுதியோடு சித்தத்தைச் சிவன் பாலே வைத்த சிவனடியார்கள் ஆகிய நாயன்மார்கள் அருளிய தேவாரத் திருமுறைப் பாடல்கள் 'தெய்வத் தமிழ் ஆகும்! பல ஆயிரம் பாடல்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் மதம் சார்ந்த தத்துவமும், தத்துவம் கடந்த தத்துவமும் கொட்டிக் கிடக்கின்றன. பச்சைப் பசுங்கொண்டலான வைகுண்டப் பெருமான் தாளடியில் மண்டிக்கிடப்பதில் அளவிலாத ஆனந்தம் அடைந்த பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்வியப்