பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுவனத் தலைவரும் தமிழக அரசின் முதல்வருமான மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் போன்று, தமிழின் சிறப்புகளைத் தரணி முழுதும் எடுத்தோதி, இந்நிறுவனச் செயல்பாட்டுக்கு மேன்மை ஏற்படுத்திவரும் தமிழக நிதியமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் தமிழ் வளர்ச்சி, அறநிலையம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசுச் செயலர் திரு க. முத்துச்சாமி இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி. இந்த அறக்கட்டளை தொடர்பான ஆயத்தப் பணிகளை ஏற்படுத்தியிருந்த இந்நிறுவன மேனாள் இயக்குநர் முழுக் கூடுதல் பொறுப்பு வகித்திருந்த முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும் நன்றி. அனைத்து இச்சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு தொடர்பான ஏற்பாடுகளையும் செய்த நிறுவனப் பணியாளர்களுக்கும், இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவின் எழுத்துருவையும் மெய்ப்பையும் திருத்திப் பதிப்பு மேற்பார்வை செய்த முனைவர் ஆ. தசரதன் மற்றும் எழுத்துருவை இந்நிறுவனத்தில் ஒளிவடிவமைப்புச் செய்த திருமதி பி.கௌசல்யா ஆகியோருக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த ராகாஸ் அச்சகத்தாருக்கும் பாராட்டுகள். இயக்குநர்