பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

11. காவிரித்தாயும் சேய்களும் சேயைத் தாய் காப்பது போல், காவிரி தமிழக மக்களைக் காக்கிறது எனப் பல்வேறு இலக்சியங்களில் பின்வருமாறு சிறப்பிக்கப் பெற்றுள்ளது. 'புனிறுதீர் குழவிக்கு இலிற்று முலைபோலச் சுரந்த காவிரி மரங்கொள் மலிநீர் - மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்’ - - - - - -- புறம்-68:3-10 பிறந்த குழந்தைக்குப் பால் சுரக்கும் முலைபோலக் காவிரி மக்களுக்கு நீர் சுரந்து அளிக்கிறதாம். "பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் தண்புனல் படப்பை எம்மூர்-” - புறம்-166:28,29, 'ಹಅಹಲ೦ಡು கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பின் உலகம் புரை.இ. - * * * + - மலிர் நிறை காவிரி-பதிற்றுப்பத்து.50:1-7 காவிரி உலகம் காக்கும் என்று கூறப்பட்டிருப்பினும் ஈண்டு, தமிழகத்தையும் வேறு சில பகுதிகளையும் காப் பதாகக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/68&oldid=1018988" இலிருந்து மீள்விக்கப்பட்டது