பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 திருக்காட்டுப் பள்ளியருகே காவிரியிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் ஆகியவற்றிற்கு இடையே திருமலை ராசனாறு பிரிகிறது. - கும்ப கோணத்திற்குக் கிழக்கே மணஞ்சேரி என்னும் இடத்தில் வீரசோழன் ஆறு காவிரியிலிருந்து பிரிகிறது. காவிரிப் பகுதியில் உள்ள சிற்றாறுகள் எண்ணிக்கை 36 எனவும், அவை எல்லாவற்றின் மொத்த நீளம் 1600 கி, மீ, எனவும் கூறப்படுகிறது. கால்வாய்களின் எண்ணிக்கையோ (சுமார்ர் 29,880 என்றும்,அவை எல்லா வற்றின் மொத்த நீளம் 24,000 கி. மீ. என்றும் கூறப் படுகிறது. - . குடகு-கரு நாடகம் வழியாகத் தமிழ் நாட்டிற்குள் புகும் காவிரி, தமிழ் நாட்டில் தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங் களில் தான் நேரில் புகுந்தோடி வளஞ்செய்கிறது, தென்னார்க்காடு மாவட்டத்தின் தென் பகுதியில் தன்னிடமிருந்து பிரியும் கொள்ளிடத்தின் வாயிலாகவும் அதிலிருந்து பிரியும் தெற்கு வடக்கு கிளைக் கால்வாய் கள் வாயிலாகவும் வளம் தருகிறது. காவிரியின் வரவு-செலவுக் கணக்கு இங்கே ஒரளவு சுருக்கமாகத் தரம்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/80&oldid=1019004" இலிருந்து மீள்விக்கப்பட்டது