இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்ச் செல்வம் இ. 275
பாடுமிடத்துச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது, அவர்,
“மானிலத் தோர்கட்குத் தேவ ரனையஅத் தேவரெலாம் ஆனலத் தால்தொழும் அஞ்சடை யிச னவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்; பாநலத் தால்கவி யாம்.எங்ஙனே இனிப் பாடுவதே” (89)
என்று பாடுகின்றார்.
அவர் தம் கருவி கரணங்களைத் தொண்டில் ஈடுபடுத்தும் திறம் நம்மனோரை அத்தொண்டில் ஈடுபடச் செய்யும் அறவுரையாக இருக்கிறது. .
“சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப -
நாவமைத்தேன், வந்தனை செய்யத் தலையமைத் தேன்தொழக்
கையமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய்
- யரும்பவைத்தேன் வெந்தவெண் ணிறணி யீசற் கிவையான் விதித்தனவே”
(93)
இவ்வகையில் நம்மை நோக்கி,
“கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல்
குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்
செற்றம்