பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் : 15 திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் - 201
நூலாசிரியர் : பாஸ்கர என். நாராயணய்யா,
Introduction - முதலறிவு

இதற்கு மத்தியில், சனிக்கிழமை பொழுதடைந்ததும் ஸ்த்யவ்ரதன் பாட்டம் அம்மையிடம் சொன்னப் பிரகாரமே இரண்டு போலிப் பெண்களை அழைத்துக் கொண்டு அவள் மாளிகைக்குச் சென்றான். பெண்கள் முன்னேற்பாட்டின்படி வெவ்வேறிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சற்று நேரமானதும் சாமியாரும் வந்து சேர்ந்தார். ஸத்யவ்ரதனைக் கண்டு சற்று திகைப்பது போல் நின்றார். இருவருக்கும் பாட்டம் அம்மை முதலறிவு (introduction) செய்து வைத்தாள். பிறகு, சாமியாரைக் கொஞ்ச தூரத்திற்கப்பால் அழைத்துச் சென்று, ஸ்த்யவ்ரதனிடம் சொன்னது போல் அவரும் அன்றிரவு தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். -

நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் 20 - மாயாமித்திரம் மறைதல், பக்கம் - 266
Wig - மயிர்த்தொப்பி

கைதிகளுக்குள் அதிகக் கலவரை செய்யும் வகுப்பினர் ஒருவருண்டு. அவர்களை மேல் காற்றுகள் என்பார்கள். அவர்களெல்லாம் தங்கள் உடம்பில் பச்சை குத்திக் கொள்வார்கள். துன்பக் குழந்தை, தோற்கப்பட்டாலும் ஆளப்படவில்லை, கடவுளுமில்லை, எஜமானுவில்லை என்ற வாக்கியங்கள் அவர்கள் சரீரத்தில் பற்பல விடங்களில் எழுதப்பட்டிருக்கும். வழுக்கு மண்டையுடைய கைதியின் தலையில் மயிர்த்தொப்பி வரைந்திருக்கும். முழுக்குருடன் கண்கள் மேல் மூக்குக் கண்ணாடி குத்தி யிருக்கும்.

இன்னொருவன் மார்பில் 'கண்ணிய ஸைன்யம்'(Legion of Honour) என்ற பிருது பச்சையில் விளங்கிற்று. அதிசயப் பேர்வழிகள் இதில் கூடியிருக்கிறார்கள்.

நூல் : நாகரீகப் போர் (1925)
அதிகாரம் 18 - படையெழுச்சி, பக்கம் - 240