பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே,
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெரு மானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே.

7.மகட் கொடை நேர்தல்‌‌

மணமகளின் வலக்கையை மணமகனின் வலக்கையின் மேல் வைக்கச் செய்து, மணமகனின் பெற்றாேரும், மணமகளின் பெற்றாேரும் தத்தம் கைகளையும் மணமக்களின் கைகளோடு மேலும் கீழுமாக வைத்துக்கொள்ளும்படி செய்தல். மணமகளின் பெற்றோர் கையில் வெற்றிலை, பாக்கு, பழம் இவைகளுடன் நீர் வார்த்துக் கொடுத்தல். அப்பொழுது பின்வருமாறு கூறுதல் வேண்டும்.

மணமகள் பெற்றாேர்

' .......... . இருக்கும் ........ , .. ஆகிய யான் என் அருமை மகள் திருவளர்செல்வி ... ...... என்ற நங்கையை ....... இருக்கும் ......... மகன் திருவளர்செல்வன் ...... ...க்கு உறவினர், ஆன்றோர் முதலியவர்கள் சான்றாகத் திருமணம் செய்தளிக்கின்றேன்.

மணமகன் பெற்றாேர்

.......இருக்கும் ...... ஆகிய யான் என் அருமை மகன் திருவளர்செல்வன் ............ க்கு ...... ... இருக்கும் ........... மகள் திருவளர்செல்வி ... நங்கையை உறவினர் ஆன்றோர் முதலியவர்கள் சான்றாகத் திருமணம் செய்து கொள்ள இசைகின்றேன்,' என்று கூறுதல்.