பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் - புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி
தாம்தொழா நிற்பார் தமர். 15

நல்ல கோட்பாட் டுலகங்கள்
    மூன்றி னுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
    அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
    இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
    கொண்ட பெண்டிர் மக்களே. 16

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.17