தமிழ்ப் பழமொழிகள்
105
ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.
- (பா-ம்.) தடவிப் பார்த்தது போல.
ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம்.
ஆலமரத்தை விழுது தாங்குவது போல. 2420
ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா?
- (பா-ம்.) ஆர் சீட்டு அனுப்புவது?
ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும்.
ஆலயம் அறியாது ஓதிய வேதம்.
ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான்.
- (பா-ம்.) எடுத்து,
ஆலயம் தகர்த்து அன்னதானம் பண்ணுகிறான். 2425
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
- (கொன்றை வேந்தன்.)
ஆலின்மேற் புல்லுருவி.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
- (தாலும் இரண்டும்; எண்கள்; நாலடியாரும் குறளும். )
ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம்.
- (இவை செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்.)
ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது. 2430
ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.
- (பா-ம்.) கருப்பட்டி.
ஆலைக் கரும்பு போலவே நொந்தேன்.
ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன்.
- (வேலை-கடல்.)
ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல.
ஆலை பாதி; அழிம்பு பாதி. 2435
ஆலை வாயிலே போன கரும்பு போல்.
ஆலை விழுது தாங்கினது போல.