பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

105


ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.

(பா-ம்.) தடவிப் பார்த்தது போல.

ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம்.

ஆலமரத்தை விழுது தாங்குவது போல. 2420

ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா?

(பா-ம்.) ஆர் சீட்டு அனுப்புவது?

ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும்.

ஆலயம் அறியாது ஓதிய வேதம்.

ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான்.

(பா-ம்.) எடுத்து,

ஆலயம் தகர்த்து அன்னதானம் பண்ணுகிறான். 2425

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

(கொன்றை வேந்தன்.)

ஆலின்மேற் புல்லுருவி.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

(தாலும் இரண்டும்; எண்கள்; நாலடியாரும் குறளும். )

ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம்.

(இவை செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்.)

ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது. 2430

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.

(பா-ம்.) கருப்பட்டி.

ஆலைக் கரும்பு போலவே நொந்தேன்.

ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன்.

(வேலை-கடல்.)

ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல.

ஆலை பாதி; அழிம்பு பாதி. 2435

ஆலை வாயிலே போன கரும்பு போல்.

ஆலை விழுது தாங்கினது போல.