பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தமிழ்ப் பழமொழிகள்


ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும்.

ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம்.

ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை.

ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ? 2625

ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை.

ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம்.

(மாற்று மண்.)

ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.

ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான்.

ஆற்று மணலை அளவிடக் கூடாது. 2630

ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.

ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ?

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.

ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும்.

ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை. 2635

ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்?

ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம்.

ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன்.

(ஆண்டாள் கவிராயர் கூற்று.)

ஆற்றை அடைக்கும் அதிவிடையம்.

(ஆற்றுடைப்பை, கிராணி வயிற்றுப் போக்கிற்கு அதி விடையம் மருந்து.)

ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்? 2640

ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு.

ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்?