பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தமிழ்ப் பழமொழிகள்


ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து. 2710

ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?

ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது.

ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.

ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை.

ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே. 2715

ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன்.

(சோறு கொண்டு; ஆன்டான் கவிராயர் கூற்று.)

ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும்.

(கருப்பு.)

ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும்.

ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன?

ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே! 2720

ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ?

ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது.

ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா?

ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர.

ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு. 2725

(புதிய தர்மகர்த்தா சொன்னது.)

ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான்.

(விழிக்கிறேன்.)

ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான்.

ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல.

ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு.

(எங்கும் உண்டு.)