178
தமிழ்ப் பழமொழிகள்
உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம்,
உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம்.
உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும். 4125
உப்பும் இல்லை, சப்பும் இல்லை.
உப்பும் இல்லை, புளியும் இல்லை.
உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே!
உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ? 4130
உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு.
உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
- (தண்ணீர் விடு, உப்பு போடு.)
உப்பு முதல் கர்ப்பூரம் வரையில்.
உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான்.
- (உப்புப் பொதிக்காரன், வெற்றிலைக்காரன்.)
உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை? 4135
- (வாசனை.)
உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா?
உப்பு வைத்த பாண்டம் உடையும்.
உப்பு வைத்த மண்பாண்டம் போல.
உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம்.
உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ? 4140
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே.
உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான்.
உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும். 4145
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம்.
உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா?
உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே.