பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

25


அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம்.

அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்.

அடை தட்டின வீடு தொடை தட்டும்.

அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா.

அடைந்தோரை ஆதரி. 470

அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம்.

அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.

அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.

அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம்.

அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல. 475

அடை மழையும் உழவு எருதும்.

அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை.

(கொடி மழை.)

அடையலரை அடுத்து வெல்.

(அடையலர்-பகைவர்.)

அடையா, அப்பமா, விண்டு காட்ட?

அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது. 480

(இல்லை.)

அண்டங் காக்காய் குழறுகிறது போல.

அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா?

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.

(அண்டத்துக்கு உள்ளது.)

அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு.

அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா? 485

அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?

அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம்.

(ஆலமரம்.)

அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்.

அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே.

அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? 490