பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

39


அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே. 815

அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம்.

அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம்.

அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரியாய்ப் போச்சு.

அம்மாவுக்குப் பின் அகமுடையான்.

அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? 820

(கூடவா?)

அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?

அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும்.

அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது.

(வடுகு.}

அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி.

அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ? 825

(வரமாட்டாள்.)

அம்மான் மகளுக்கு முறையா?

அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா?

(வரிக்க.)

அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.

அம்மி இருந்து அரணை அழிப்பான்.

(அம்மி-மறைந்து.)

அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்? 830

அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ?

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள்.

அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம்.

அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல்.

(இலவம் பஞ்சு எனக்கு என்ன கதி என்றாற் போல்.)

அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன? 835