பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



58

தமிழ்ப் பழமொழிகள்


அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம்.

அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி.

அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன்.

(வென்றவன்.)

அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது. 1290

அவனண்டை அந்தப் பருப்பு வேகாது.

அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு.

அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை.

அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை.

அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை. 1295

அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது.

அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும்.

அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்.

அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம். 1300

அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்.

அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்?

அவனுக்க ஜெயில் தாய் வீடு.

அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும்.

அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது. 1305

அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது

அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.

அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான்.

அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான்.

(இருக்கிறான்.)

அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது. 1310

அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது.

அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு.

அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?

அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும்.

அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது. 1315

(பி-ம். திருடி)

அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா?

அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம்.