பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

99


காடு திருத்திப் பருத்தி விதைக்கப் போகிறேன் என்றானாம் அப்பன்; அதற்குள் மகன் அந்த நூலில் தனக்குத் துப்பட்டி நெய்து தர வேணும் என்றானாம். 7860


காடும் செடியும் அவளாகத் தோன்றுகின்றன என் கண்களுக்கே.

காடும் செடியும் இல்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம்.

(ஊரில்)

காடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம், கோல் வளம், கோல் வளம் கோன் வளம்.

(குடிவளம் கோயில் வளம்.)

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.

காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்துவிடும். 7865


காடு விளைந்து என்ன மச்சானே, நம் கையும் காலுந்தானே மிச்சம்?

காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?

காடு வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு வெட்டப் பயமா?

காடு வெட்டி நஞ்சை பண்ணு: மாடு கட்டி வைக்கோல் போடு.

காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதோ? 7870


காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.

காடை கத்தினால் பாடை கட்டும்.

(காடை கட்டினால்.)

காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.

காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?

காணக் கிடைக்காத தங்கம். 7875


காணக் கிடைக்குமோ? காண என்றால் கிட்டுமோ?

காணக் கிடைத்தது. கார்த்திகைப் பிறை போல.

காணப் பட்டன எல்லாம் அழியப் பட்டன.

(அழியத் தக்கன.)

காணம் என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது.

காணம் விற்று ஒணம் கொண்டாட வேண்டும். 7880