106
தமிழ்ப் பழமொழிகள்
காயும் புழுவுக்குச் சாயும் நிழல் போல
காயேனவாசா-கறி என்ன சமைச்சாள்?
கார் அரிசிச் சாதம், கருணைக் கிழங்குத் துவையல். அத்தையைச் சமைக்கச் சொன்னாளாம்: அகப்பையை எடுத்துக் காட்டினாளாம்.
கார் அறுக்கட்டும்; கத்தரி பூக்கட்டும்.
கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய்-வழியும். 8020
கார்த்திகை அகத்தி காம்பு எல்லாம் ருசி.
கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம்.
கார்த்திகைக் கார் கடை விலை; தைச் சம்பா தலை விலை.
கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே.
கார்த்திகைக்குப் பின் மழை இல்லை: கர்ணனுக்குப் பின் கொடை இல்லை. 8025
கார்த்திகை கண்டு களம் இடு.
கார்த்திகை கன மழை.
கார்த்திகை கார்த்திகை என்று கழுத்தறுத்த பிராமணா, கார்த்திகைக்குப் பின் இந்த அகமுடையாள்தானா?
- (நீ தானா அகமுடையாள்?)
கார்த்திகை கால் கோடை.
கார்த்திகை நண்டுக்குக் கரண்டி நெய். 8030
கார்த்திகைப் பனியைப் பாராதே; கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.
கார்த்திகைப் பிறை போல.
- (பிறை கண்டவன் போல. )
கார்த்திகைப் பிறையைக் கண்ட கண்ணால் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
- (பிறகு மழை இல்லை என்றபடி.)
கார்த்திகைப் பொரியும் கணுவுப் பழஞ் சோறும்.
கார்த்திகை மழை கல்லை உடைக்கும். 8035
கார்த்திகை மாசத்தில் உழுதால் கடுகு மிளகு காணாது.
கார்த்திகை மாசத்தில் கடு மழை பெய்தால் கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர் விடும்.