தமிழ்ப் பழமொழிகள்
107
கார்த்திகை மாசத்தில் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது.
கார்த்திகை மாசத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்தது போல.
கார்த்திகை மாசத்துக் கர்க்கட சந்திர யோகம் கல்லைத் துளைக்கும். 8040
கார்த்திகை மாசத்து நாய் படும் பாடு போல.
கார்த்திகை மாசத்துப் பூமா தேவியைப் போல.
கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதற்கு முன்னே வந்து போகும்.
கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்.
கார்த்திகை மாசம் கலம் கழுவப் போது இல்லை. 8045
கார்த்திகை மாசம் கலம் கழுவ மழை விடாது.
கார்த்திகை மாசம் கையிலே; மார்கழி மாசம் மடியிலே.
- (அவரைக் காய்.)
கார்த்திகையில் கருக்கல் கண்ட இடத்தில் மழை.
கார் நடவைக் கலக்க நட்டது போல. கார்ப் பயிர் கலந்து கெட்டது; பிசானப் பயிர் நெருங்கிக் கெட்டது. 8050
கார்ப் பயிரைக் கண்ணைக் கட்டி அறு.
கார் மின்னிக் கெட்டது; பருவம் மின்னாமல் கெட்டது.
கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு.
காரண குருவே காரிய குரு.
காரணம் அடா கல்லுக் கொத்தா; சாகிற கிழவி பிள்ளை பெற்றாள். 8055
காரணம் இல்வாமல் நாய் குரைக்காதே,
காரணம் இன்றிக் காரியம் இல்லை.
காராம் பசுவுக்குப் புல் ஆனால் நந்தவனத்துக்குக் களையும் ஆம்.
- (நந்தவனுத்துக்குக் காளையும் ஆம்! மழையும் ஆம்.)
காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை அடித்துப் பிழைப்பது நன்று.
- (பேரிகை கொட்டி.)