பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தமிழ்ப் பழமொழிகள்


 காரியக்காரன் கொல்லையிலே கழுதை வந்து மேய்கிறது. 8060


காரியத்தில் வருகிற போதுதான் மாடு படுத்துக் கொள்கிறது.

காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.

காரியத்திலே கப்பல்.

காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.

காரியத்துக்குச் சோம்பினவர்களுக்குக் கைக் குழந்தை ஒரு சாக்கு. 8065


காரியத்துக்கு வாசுதேவர் கழுதையின் காலைப் பிடித்தார்.

காரியத்தைப் பற்றிக் கழுதையையும் காலைப் பிடி.

(காரியத்தை வேண்டிக் கழுதையின்.)

காரியப் பைத்தியம்.

காரியம் ஆகிற வரையில் கழுதையையும் காலைப் பிடி.

(கழுதைக் காலையும் பிடி, கும்பிடு.)

காரியம் ஆகிறவரையில் காலைப் பிடி; பின்னே கழுத்தைப் பிடி. 8070

(மென்னியை,)


காரியம் ஆகுமட்டும் காலைப் பிடி, காரியம் ஆன பிறகு குடுமியைப்பிடி.

(கழுத்தைப் பிடி.)

காரியம் ஆகுமானால் தலையைப் பிடி, காரியம் ஆகாவிட்டால் காலைப் பிடி.

காரியம் இல்லாத மாமியாருக்குக் கல்லும் நெல்லும் கலந்து வைத்தாள்.

(மாமியார் வைத்தானாம்.)

காரியம் உண்டானால் கழுதையையும் காலைப் பிடி.

காரியம் உள்ளவரை காலைப் பிடி; இல்லாவிட்டால் பல்லைப் பிடி. 8075


காரியம் செய்துவிட்டுக் கழுநீர்ப் பானையில் கைவிட்டாளாம்.

காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?

(பிரதானமா?)

காரியம் முடிந்தால் கம்மாளன் புறத்தே.