பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

109


காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு.

(காரி - எள். வெள்ளை-பருத்தி.)

காருக்கு ஒன்று; சம்பாவுக்கு ஒன்று. 8080


காருக்குக் களை எடுத்தாற் போல்.

காருக்குப் பட்டம் இல்லை.

காருக்குப் பின் பட்டம் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை.

காருக்கும் கத்தரிக்கும் காலம் இல்லை.

காருக்கு வயலும் மோருக்குச் சாதமும் அதிகமாக வைக்கக்கூடாது. 8085


காரும் கம்பும் கதிரிலே.

காரைக்காட்டானோ? ஊரைச் சுட்டானோ?

காரைக் கிள்ளி நடு; சம்பாவை அள்ளி நடு.

காரையும் எள்ளையும் கருதிப் பயிர் இடு.

காரையை வெட்டிக் கரணை போட்டால் எடையும் பணமும் காணும். 8090


கால் அடிபட்ட நாயும் காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவுமா?

கால் அடி வைக்கச்சே நீச்சானால் கரை ஏறுகிறது எப்படி?

(வைக்கச்சே நீரானால்,)

கால் அணாக் கொடுக்கிறேன் என்றால் காத வழி நடப்பான்.

(கால் அரை கொடுக்கிறேன்.)

கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்; நூல் அளவே ஆகுமாம் நுண் சீலை.

(நூற் சீலை.)

கால் ஆட்டக் கால் ஆட்டத் தூணாட்டம் வீங்கிப் போயிற்று 8095


கால் ஆட்டி வீட்டில் வாலாட்டி இருக்காது.

கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது.

கால் ஆடக் கோல் ஆடும்; கோல் ஆடக் குரங்கு ஆடும்.

(கால் ஆடப் பாம்பு ஆடும்.)

கால் இல்லா முடவன் கடலைத் தாண்டுவானா?