தமிழ்ப் பழமொழிகள்
111
காலத்தில் பிறந்த பிள்ளை கைக்கு உதவும்.
காலத்தில் பெய்த மழை போல. 8125
காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே,
காலத்தினால் செய்த நன்றி.
- (குறள்.)
காலத்துக்கு ஏற்ற கோலம்.
- (தக்க கோலம்.)
காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்.
காலத்துப் பயிர் கரம்பிலே. 8130
காலத்து விதை கரம்பிலே.
காலத்தே பயிர் செய்.
கால தாமதம் காரியம் நஷ்டம்.
காலப் பயிர் கடக்க நிற்கும்.
காலப் புழுதி இல்லாதவன் கைம்முதல் இழப்பான். 8135
காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறிக் கதிர்காமா, கதிர்காமா
என்றால் கைகொடுக்குமா?
காலம் அல்லாத காலத்தில் கப்பல் ஒட்டி.
காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய்ச் சுரைக்காய்.
காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.
காலம் அறிந்து பிழையாதவன் வாலறுந்த குரங்கு ஆவான். 8140
காலம் அறிந்து பெய்யாத மழையும், நேரம் அறிந்து உண்ணாத
உணவும் வீண்.
காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.
காலம் கண்ட கூனி.
காலம் கலி காலம் அல்லவா?
காலம் கலி காலம்; கறுப்புக் கோழி வெள்ளை முட்டை இடும். 8145
- (இடுகிறதாம்.)
காலம் கெட்ட கேட்டிற்குக் கருத்தான் என்ன செய்வான்?
காலம் கெட்டுக் கிடக்கிறது; ஜாக்கிரதையாய் இரு.
காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற் போல.
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
- (செய்வதைக் கோலம் செய்யாது.)
காலம் செய்த கோலத்துக்கு ஆரை வெறுப்பது? 8150