பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழ்ப் பழமொழிகள்


காலம் செய்வதைக் காலன் செய்வான்.

காலம் செய்வதைக் கோலம் செய்யாது.

(செய்யுமா?)

காலம் துக்கத்தை மாற்றும்.

காலம் போம்; வார்த்தை நிற்கும், கப்பல் போம்; துறை நிற்கும்.

காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல. 8155


காலம் வரும் வரைக்கும் யமன் காத்திருப்பான்.

(பழமொழி நானூறு.)

காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது.

காலமே எழுந்திருந்து காக்கை முகத்தில் விழித்தல் ஆகாது.

காலனுக்கு விளைச்சல் கூடுதல்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

கால க்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம். 8160


காலா காலத்தில் செபம் பண்ணினால் மேல் ஒரு பாவமும் இல்லை.

காலால் இடுவதைத் தலையால் செய்கிறான்.

(இட்ட வேலையை.)

காலால் காட்டினதைக் கையால் செய்கிறது.

(காலால் ஏவியதை.)

காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது.

காலால் நடந்தால் காத வழி? தலையால் நடந்தால் எவ்வளவு தூரம்? 8165


காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது.

(தள்ள முடியாது. அவிழ்க்கப்படாது.)

காலில் அழுக்கு இருந்தால் தலையில் அமேத்தியம் என்பார்.

காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி.

காலில் தைத்தது கண்ணிலே தைத்தது போல.

காலில் நகம் முளைத்த நாள் முதலாக. 8170


காலில் பட்டது கண்ணில் பட்டது போல.

(தைத்தது போல.)

காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும்.

காலில் பட்ட பிறகு கிரகசாரம் போய் விடாது.

(போகாது.)