பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கெள

கெளசிகத்துக்கு ஒளியில் எவர்க்கும் ஒளியும்.

(ஒளிரும்)

கெளபீனத்துக்கு இச்சைப்பட்ட சாமியார் கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டாராம்.

கெளபீன ஸ்ம்ரகூடிணார்த்தம் அயம் படாடோப:

கெளவை உடையார் காலைத் தொடு.

கெளவை கருதேல். 10125


கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

கெளவைப் பட்டால் காயத்தில் ஒருமுழம் நீளுமா?

கெளவையது இல்லான் திவ்விய சொல்வான்.

கெளளி ஊருக்கெல்லாம் பலன் சொல்லும்; தான் மாத்திரம் கழுநீர்ப் பானையில் விழும்.

ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாய்பிறந்தது பொன்மலை.

ஙப்போல் வளை. 10180

(ஆத்திகுடி.)