பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சக்களத்தி அறுத்தால் தானும் அறுப்பாள்.

சக்களத்திக்கு ஆண்பிள்ளை பெற்றால் பொறாமை, மலடிக்கு எவள் பிள்ளை பெற்றாலும் பொறாமை.

சக்களத்தி பிள்ளை தலைமாட்டுக் கொள்ளி.

சக்களத்தி மாமியார்.

சக்கிலித் தெரு நாய் சமயத்துக்கு உதவாது. 10135


சக்கிலிப் பெண் நெற்றியிலே குஜ்ஜிலிப் பொட்டைப் பார்.

சக்கிலிப் பெண்ணும் சாமைக் கதிரும் பக்குவத்திலே பார்த்தால் அழகு.

சக்கிலியன் சாமிக்குச் செருப்படிதான் பூஜை.

சக்கிலியன் சாமியைச் செருப்பால் அடித்துக் கும்பிடுவானா?

சக்கு சக்கு என்று பாக்குத் தின்பான். சபை மெச்ச வீட்டிலே வந்து கடைவாய் நக்குவான். 10140


(பெண்டுகள் மெச்ச.)

சக்கை போடு போடுகிறான்.

சக்தி இருந்தால் செய்; சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.

சக்தி இல்லா விட்டால் சிவனே என்று கிட.

சத்தியம் பயந்து சங்கீதம்.

சகசண்டி மாட்டுக்கு இரண்டொரு சூடு: நம் சைவப் பின்னைக்கு மேலெல்லாம் சூடு. 10145


சகத்தைக் கெடுத்துச் சுகத்தை வாங்குகிறார்.

சகத்தைக் கொடுத்தும் சுகம் வாங்கிக் கொள்.

(தேடிக் கொள்.)

கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் பிறர் துணி என்றும் பாராது.

சகதியில் கல்லை விட்டு எறிந்தால் மேலே தெறிக்கும்.

(சேறு முகத்தில் தெறிக்கும்.)

சகல தீர்த்தங்களுக்கும் சமுத்திரமே ஆதரவு. 10150


(நதிகளுக்கும் காரணம்.)