பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழ்ப் பழமொழிகள்


சகல நட்சத்திரமும் ஒன்றாய்க் கூடினாலும் சந்திரனுக்கு இணை ஆகுமா?

சகலமும் கற்றவன்தன்னைச் சார்ந்து இரு.

சகலன் உறவில் சாண் கொடி பஞ்சமா?

(சாண் கயிறு.)

சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும்.

சகுனம் நன்றாக இருக்கிறது என்று பொழுது விடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா? 10155


சகுனம் பார்க்கப் போகும்போது மடியில் பூனையைக் கட்டிக் கொண்ட மாதிரி.

சகுனம் பார்க்காதவன் காத வழியில் மாண்டான்.

சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.

சங்கஞ் செடி ஒணானைக் கண்டு சாகிற கிழவியைக் குத்தின கதை.

சங்கட சனியனே, சடுதியில் விட்டுத் தொலை. 10160

(சகதியில்.)


சங்கடமான பிள்ளையைப் பெற்று வேங்கடராமன் எனப் பெயர் வைப்பார்.

சங்கட வேதனைக்கெல்லாம் தலையிட்டுக் கொள்கிறதா?

சங்கடப் பாட்டா, தங்கப் பாட்டா?

சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா?

சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா? 10165


சங்கிலே வார்த்தால் தீர்த்தம்; செம்பிலே வார்த்தால் தண்ணீர்.

(சட்டியிலே வார்த்தால்.)

சங்கீதம் தெரியாவிட்டாலும் இங்கிதம் தெரியும்.

சங்கு ஆயிரத்தோடு காசி போனாலும் தன் பாவம் தன்னோடே

(ஆயிரம் கொண்டு.)

சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால் பொன்பாளம் வந்தாலும் வந்தது: மண் பாளம் வந்தாலும் வந்தது.

சங்கு உடைந்தது; மண் கரைந்தது. 10170


சங்கு ஊதாமல் தாலி கட்டுவது உண்டா?

சங்கு ஊதிப் பொழுது விடியுமா?

சங்கு சுட்டாலும் தன் வெண்மை குன்றாது.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

சங்கு சூத்து ஆகிறது; ஆண்டி வாய் ஆகிறது. 10175

(சங்கு சூத்தும் ஆண்டி வாயும்.)