பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

209


சம்சாரக் குட்டு வெளியிட்டால் நஷ்டம், சம்சாரம் சாகரம் துக்கம். 10335


சம்சாரம் பெருத்துப்போச்சு என்று சாலுக்குக் குறுணி விதைத்தானாம்.

சம்சாரமோ சாகரமோ?

சம்சாரி அகத்திலே சாதத்துக்கு என்ன குறைவு?

சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கின்றன.

சம்பந்தன் தன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான். 10340


சம்பந்தி கிருகஸ்தன் வந்தான்; தவலையை எடுத்து உள்ளே வை.

சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரன் தனி.

சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரனுக்குக்கோணக் கோண இழுக்கும்.

சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சும் இல்லை; பேச்சும் இல்லை.

(சத்திரத்தில் உண்டால்.)

சம்பந்தி வாய்க்கும் மாப்பிள்ளை குணத்துக்கும் இன்னும் ஒரு பெண்ணை இழுத்து விட்டாளாம். 10345


சம்பளம் அரைப்பணம் ஆனாலும் சலுகை இருக்க வேண்டும்.

(சலுகை.)

சம்பளம் இல்லாத சேவகனும் கோபம் இல்லாத எசமானும்.

சம்பளம் இல்லாத மந்திரி; கோபம் இல்லாத ராஜா.

சம்பளம் இல்லாமல் ஆஜர் .

சம்பளம் குறைந்தாலும் சலுகை இருக்க வேண்டும். 10350


சம்பளம் சனிக்கிழமை; பெண்டாட்டி பேர் புதன் கிழமை.

சம்பள விதத்திலேயா குண்டு படுகிறது?

சம்பா விளைந்து காய்ந்து கிடக்கிறது: உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்கிறது.

(அழிக்கிறது.)

சம்மன் இல்லாமல் ஆஜர்.

சமண சந்தியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன? 10355


சமண சந்நியாசி கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.

(சமணன் கைச் சிலைப்போன் போல)

சமய சஞ்சீவி.

சமயத்திலே காலைப்பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி.