பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

97


காட்டானையைப் பிடிக்க வீட்டானை வேண்டும்.

காட்டானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம்.

காட்டானை விட்டாலும் கவியானை விடாது.

காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே.

காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் நிற்கலாமா? 7820


காட்டில் அழுத குரல்.

காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல.

காட்டில் உள்ள ஆனையைக் காட்டி வீட்டில் உள்ள பெண்ணைக் கடத்து.

காட்டில் எரித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்.

காட்டில் எரித்த நிலாவும் கானலில் பெய்த மழையும். 7825


காட்டில் கடுவாய்; கடலில் கொடுவாய்.

காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு.

காட்டில் செய்த சபதம் வீட்டில் மறந்தது போல.

காட்டில் புதைத்த கன தனமும் பாட்டில் புதைத்த பழம் பொருளும் வீட்டில் மனையாள் மனமும் நாட்டில் அறிவது அரிது.

காட்டில் புலி கொல்லும்; நாட்டில் புளி கொல்லும். 7830


காட்டில் யானையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுப்பது போல.

காட்டிலே மேயுதடி காடை, அவன் காட்டுகிறானடி பெண்ணை ஜாடை.

காட்டு எரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகை போய் மேற்கே மேகம் கிளம்ப, மின்னிக் குமுறி மழை பொழிய, ஆற்றில் வெள்ளம் பெருகி அடித்துப் போன பலசரக்கை ஊரார் இழுப்பது வழக்கு; குயவன் இழுப்பது கணக்கு.

காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி.

காட்டுக் களாக்காயும் கண்கெட்ட தயவு இல்லாத ஒணானும் கோத்துக் குலாவுவது போல. 7835

(சேர்ந்து குலாவுவது.)