10
தமிழ்ப் பழமொழிகள்
செத்தவன் பெண்டாட்டியை இருந்தவன் கொண்டது போல.
- (பெண்சாதியை.)
செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது. 11335
- (யாழ்ப்பாண வழக்கு.)
செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு.
செத்தவன் வீட்டில் கெட்டிவன் யார்?
செத்தவன் வீட்டில் பாடுபட்டவர் ஆரோ?
செத்தன்று வா என்றால் பத்தன்று வருவான்.
செத்தாருக்கு உவமானம் வையகத்தில் இல்லையா? 11340
செத்தாரைச் சாவார் சுமப்பார்கள்.
செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா.
செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு.
செத்தால் பிழைக்க மாட்டான்,
செத்துக் கிடக்கிற பிணத்தைக் கண்டால் சிறுக்கச் சிறுக்க வெட்டுவேன் என்ற கதை. 11345
- (சிறுக்கிறவரை.)
செத்துச் சுண்ணாம்பாய்ப் போகிறேன்.
செத்துத் தெய்வமாய் நிற்கிறாள்.
செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ?
செத்துப் போன தாதன் மொட்டுப் போல முளைத்தான்.
செத்துப் போன பசுவைக் கெட்டுப் போன பாப்பானுக்குத் தாரை வார்த்த கதை. 11350
செத்துப் போன பாட்டின் இருந்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம்.
- (தெரிவிக்கலாம்.)
செத்துப் போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள்.
செத்துப் போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம்.
செத்துப் போன பிறகு நித்திய சிராத்தம் செய்கிறது.
செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம். 11355