பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

11


செத்தும் கொடுத்தான் சீதக்காதி.

(சீதக்காதி-செய்து அப்துல் காதர்.)

செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி.

(சீயபுரத்து.)

செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன்.

செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும்.

(யாழ்ப்பாணத்து வழக்கு.)

செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11360


செந்தழலை முன்றானையில் முடியலாமா?

செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும்.

செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி.

செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?

(செப்பிடு வித்தை.)

செப்படி வித்தை எப்படிப் போவேன்? 11365


செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?

(பாடமா?)

செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

செப்பும் பந்தும் போல.

செம்பால் அடித்த காசும் கொடாத லோபி.

(காசு தர மாட்டேன்.)

செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை. 11370


செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான்.

செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது.

செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம்.

(பாதேயம்-கட்டுச்சோறு, பாதரக்ஷணம்-செருப்பு.)

செம்பு நடமாடினால் குயவன குடி போவான.

(நடமாடக் குயவன் தன்னால் ஒதுங்குவான்.)

செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி. 11375

(ஒரு கதை செம்பொனி சோதி, திருவையாற்றில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.)


செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும்.

செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே.

செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல.