தமிழ்ப் பழமொழிகள்
11
செத்தும் கொடுத்தான் சீதக்காதி.
- (சீதக்காதி-செய்து அப்துல் காதர்.)
செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி.
- (சீயபுரத்து.)
செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன்.
செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும்.
- (யாழ்ப்பாணத்து வழக்கு.)
செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11360
செந்தழலை முன்றானையில் முடியலாமா?
செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும்.
செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி.
செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
- (செப்பிடு வித்தை.)
செப்படி வித்தை எப்படிப் போவேன்? 11365
செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
- (பாடமா?)
செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
செப்பும் பந்தும் போல.
செம்பால் அடித்த காசும் கொடாத லோபி.
- (காசு தர மாட்டேன்.)
செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை. 11370
செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர்
பெற்றான்.
செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது.
செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம்.
- (பாதேயம்-கட்டுச்சோறு, பாதரக்ஷணம்-செருப்பு.)
செம்பு நடமாடினால் குயவன குடி போவான.
- (நடமாடக் குயவன் தன்னால் ஒதுங்குவான்.)
செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி. 11375
- (ஒரு கதை செம்பொனி சோதி, திருவையாற்றில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.)
செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும்.
செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே.
செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல.