12
தமிழ்ப் பழமொழிகள்
செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம்.
செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை. 11380
செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான்.
- (மயிர் தானே கொட்டிவிடும்.)
செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது.
செய்த தீவினை செய்பவர்க்கே.
செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா?
செய்த பாவத்தைச் சொல்லிக் கழி. 11385
செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்.
செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே.
செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும்.
செய்த வினை செய்தவர்க்கே எய்திடும்.
செய்த வினை செய்தவனையே சாரும். 11390
செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ?
செய்தானை ஒவ்வாத பாவையோ இல்.
- (பழமொழி நானூறு.)
செய்தும் சிரிப்பாணி.
செய்யாத வித்தை எல்லாம் செய்தாலும் தேங்காய்க் குடுக்கையிலே மூத்திரம் பெய்வாளா?
செய்யாப் பிள்ளை வரப்பிலே செய்வாய், செய்வாய் என்றேனே; நீ செய்யேன்; செய்யேன் என்றாயே; நீ பார்த்துக் கொள்; நீ கேட்டுக் கொள். 11395
செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.
செய்வன திருந்தச் செய்.
- (செய்வினை.)
செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
செருப்பாக உழைத்தான்.
செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது. 11400
செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல.
செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல.