பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


12

தமிழ்ப் பழமொழிகள்



செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம்.

செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை. 11380


செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான்.

(மயிர் தானே கொட்டிவிடும்.)

செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது.

செய்த தீவினை செய்பவர்க்கே.

செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா?

செய்த பாவத்தைச் சொல்லிக் கழி. 11385


செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்.

செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே.

செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும்.

செய்த வினை செய்தவர்க்கே எய்திடும்.

செய்த வினை செய்தவனையே சாரும். 11390


செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ?

செய்தானை ஒவ்வாத பாவையோ இல்.

(பழமொழி நானூறு.)

செய்தும் சிரிப்பாணி.

செய்யாத வித்தை எல்லாம் செய்தாலும் தேங்காய்க் குடுக்கையிலே மூத்திரம் பெய்வாளா?

செய்யாப் பிள்ளை வரப்பிலே செய்வாய், செய்வாய் என்றேனே; நீ செய்யேன்; செய்யேன் என்றாயே; நீ பார்த்துக் கொள்; நீ கேட்டுக் கொள். 11395


செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.

செய்வன திருந்தச் செய்.

(செய்வினை.)

செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?

செருப்பாக உழைத்தான்.

செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது. 11400


செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல.

செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல.