பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தமிழ்ப் பழமொழிகள்



நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? விபூதி பூசினவன் எல்லாம் ஆண்டியா?

நாமம் போட்டு விடுவான்.

நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. 13940


நாய் அடிக்கக் குறுந்தடியா?

(கோலா?)

நாய் அடிக்கக் கோல் தேவையா?

நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிறான்.

நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது?

நாய் அடித்த படுபாவி சேய் இல்லாது அழுதானாம். 13945


நாய் அடையுமா, சிவலோக பதவி?

நாய் அறியுமா, ஒரு சந்திப் பானை?

நாய் அறியுமா, நறு நெய்யை.

நாய் அன்பு நக்கினாலும் தீராது.

நாய் ஆசை மலத்தோடு. 13950


நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா?

நாய் ஆனாலும் சேய் போல.

நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.

நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல.

நாய் இருப்பது ஓர் ஆள் இருக்கிற மாதிரி. 13955


நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணிற்றாம்.

நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம்.

நாய் உண்ட புலால் போல.

நாய் உதறினால் நல்ல சகுனம்.

நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல. 13960


நாய் உளம்புதல் மாதிரி.

நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்?

நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும்.

நாய் ஊளையிட்டாற் போல.

நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல். 13965


நாய் ஊளையும் சொல்லி நரி ஊளையும் சொல்லலாமா?

நாய் எங்கே? சிவலோகம் எங்கே?

நாய் எச்சில், தாய் எச்சில்.

நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருஷன்.

நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும். 13970