பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

123



நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோஷம் அடையும்.

நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும்.

நாய் ஓட ஓட நரியும் விரட்டும்.

நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும்.

நாய்க் கடிக்குச் செருப்படி. 13975


நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம்.

நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல.

நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது.

நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம்.

நாய்க்கடி விஷம் நாற்பத்தெட்டு நாள். 13980


நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்று மாசப் பாடு.

நாய்க்கால் சிறு விரல் போல.

நாய்க் காவல் தாய்க்காவல் போல.

நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகு பல்லும்.

நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன? 13985


நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை.

நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்?

நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்கு உண்டோ மயிர்ப் பஞ்சம்?

நாய்க்கு உபசாரம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது.

நாய்க்கு உள்ள அறிவு கூட இல்லையா? 13990


நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது.

நாய்க்கு எங்கே அடிப்பட்டாலும் காலைத்தான் நொண்டும்.

நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை.

நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து?

நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம். 13995


நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி.

நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது.

நாய்க்கு ஏது சேமியா பாயசம்?

(பால் பாயசம்?)