பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

125



நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப் பானை?

நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க? 14025


நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம்?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய்க்குத் தெரியுமா தோல் தேங்காய்?

நாய்க்குத் தெரியுமா நல்லெண்ணெய்ப் பானை?

நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம். 14030


நாய்க்குத் நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும்.

நாய்க்கு நடை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா?

நாய்க்கு நடவாத நடப்பு நடக்கும்.

நாய்க்கு நரகல் சர்க்கரை.

நாய்க்கு நரிக் குணம். 14035


நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும்.

நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும்.

நாய்க்கு நல்ல தனம்; பேய்க்குப் பெரிய தனம்.

நாய்க்கு நல்ல ருசி தெரியுமா?

நாய்க்கு நறு நெய் இணங்காது. 14040

(தகுமோ?)


நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும்.

நாய்க்கு நாக்கில் ஜலம் சொட்டுகிறது போல.

(கொட்டுகிறது.)

நாய்க்கு நாணயம் எதுக்கு?

நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தியனுக்கு வைத்தியன் பகை, தாசிக்குத் தாசி பகை.

நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே. 14045


நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம்.

நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது.

நாய்க்கு நோய் ஏது?

நாய்க்குப் பகை நாயேதான்.

நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும். 14050


நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல.

நாய்க்குப் பல் நாற்பத்திரண்டு.