தமிழ்ப் பழமொழிகள்
127
நாய்க்கு வாழ்ந்து நாலு பிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி.
நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு.
- (நாயகனுக்குப் பெருமை.)
நாய்க்கு வெண்டயம் போட்டது போல. 14080
நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும்.
நாய்க்கு வேலை இல்லை; அதைப் போல் அலைச்சல் இல்லை.
நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
நாய்க் கூத்துக் கட்டினால் குரைக்க வேணும்.
நாய் கக்கித் தின்றது போல. 14085
நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
- (அடித்தாற் சரி,)
நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும்.
நாய் கடித்த வீட்டில் நீராகாரம் சாப்பாடு.
நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை.
நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா? 14090
- (அடி)
நாய் கத்தினால் நமனும் பயப்படுவான்.
நாய் கருப்புக் கட்டியைக் கடித்தாற் போல.
நாய்களிலுமா ஜாதி வித்தியாசம்?
நாய் காசிக்குப் போன மாதிரி.
நாய் காணிற் கற்காணாவாறு. 14095
- (பழமொழி நானூறு.)
நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது.
நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ்.
நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே.
நாய் குரைக்கப் பேய் நடுங்கும்.
நாய் குரைத்துக் காது செவிடானது; நாய் கடித்து கால் ரணமானது. 14100
நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்தது போல.
நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?
நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது.
நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?
நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி. 14105
- (ஞாயிற்றுக் கிழமை விரதமாம்.)