தமிழ்ப் பழமொழிகள்
135
நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்கும் பயம்.
நாயைக் கண்டு காயம் கரைக்கிறதா?
- (கண்டுதானா கரைக்கிறது?)
நாயைக் கண்டு பயந்த முயல் போல. 14305
நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல.
நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்.
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்.
நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்.
நாயைக் கூப்பிடுகிற நேரத்தில் மலத்தையும் எடுத்துச் சாணத்தையும் பூசிவிடலாம். 14310
நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
- (மூஞ்சியை.)
நாயைக் கொண்டு போனால் மிளாவைக் கொண்டு வரலாம்.
நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல.
நாயைக் கொன்ற பாவம் நாலு ஜன்மம் எடுத்தாலும் போகாது.
நாயைச் சீ என்றால் காத வழி போகும். 14315
நாயை நல்லம்மா என்றும், பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்.
நாயைப் பற்றிக் கேட்பாரும் இல்லை; நடு வீட்டில் வைப்பாரும் இல்லை.
நாயைப் பார்க்க நரி தேவலை; ஊரைப் பார்த்து ஊளை இட.
- (இடுகிறது.)
நாயைப் பிடித்துக் கட்டிப் பிச்சை போட்டாற் போல.
நாயைப் பிடித்து நரிக்குக் கல்யாணம் செய்து வைத்தது போல. 14320
நாயைப் பூஜித்தாலும் அதனிடம் புனுகு உண்டாகுமா?
நாயைப் போல் அலைந்தாலும் நாலு காசுக்கு வழி இல்லை.
நாயைப் போல் குழைகிறான்.
நாயைப் போல் நாக்கு நாலு முழம்.
நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன? 14325