பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

163



நொண்டிக்குக் குச்சோட்டமா?

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

நொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான்.

நொண்டிக்கு நூற்றெட்டுக் கால்.

நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன். 14920


நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம்.

நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம்.

நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை.

நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற் கெல்லாம் படைப்பானேன்?

நொண்டி புரத்தான் முயல் போச்சு. 14925


தொண்டியால் முயல் போயிற்று.

நொண்டுகிற மாடு பொதி சுமக்காது.

நொந்த கண் இருக்க நோக்கக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி.

நொந்ததை உண்டால் நோய் உண்டாகும்.

நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? 14930


நொந்த மாட்டில் ஈ ஒட்டினது போல.

நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா?

நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன்.

(அறியார்.)

நொந்து நூல் அழிந்து போகிறது.

நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார், 14935


நொய் அரிசி கொதி பொறுக்குமா?

(தாளாது?)

நொய் அரிசி பொரி பொரிக்காது.

நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார்.

நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்.

(கண்ணுக்கு.)

நொள்ளைக் கண்ணனுக்கு மை இடுகிறதா? 14940


நொள்ளைக் கண்ணு நரிவிழுந்து லோகம் மூணும் சென்ற கதை.

நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்தென்ன?

நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல.

நொறுங்கத் தின்றால் நூறு ஆயிசு.

(வயசு.)

நொறுங்குண்டவனைப் புறங்கொண்டு உரைப்பான். 14945

(நொறுக்குண்டவணை உரைப்பாய்.)