தமிழ்ப் பழமொழிகள்
171
பசியாமல் வரம்தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார்.
பசியா வரம் படைத்த தேவர் போல.
பசியிலும் எழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா? 15105
பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது.
- (அறியுமா?)
பசி வந்தால் பக்தி பறக்கும்.
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
- (பறக்கும்.)
பசி வேளைக்குப் பனம் பழம் போல வை.
பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது. 15110
பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான்.
பசு ஏறு வாலும் எருது கூழை வாலும்.
பசுக் கறக்கு முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும்.
- (பன்னிரண்டு முறை.)
பசுக் கறந்தாற் போல.
பசு கறுப்பானால் பாலும் கறுப்பா? 15115
பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
பசு குசுவினாற் போல.
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
- (பார்ப்பான் சாதுவும்.)
பசு கிழமானால் பால் ருசி போமா?
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது. 15120
பசுத் தின்னாவிடில் பார்ப்பானுக்கு.
பசுத் தோல் போர்த்த புலி.
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
பசுந்தாள் உரமே பக்குவ உணவாம்.
பசுப் பிராயம். 15125
பசுப் போல இருந்து புலிபோலப் பாய்கிறான்.
பசு போன வழியே கன்று போகும்.
பசும் உரத்திலும் பழம் புழுதி மேல்.
பசும் புல் தேய நட வாத பாக்கியவான்.
பசும்புல் நுனிப் பனி ஜலம் போல 15130