பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

225



பிள்ளை இல்லாச் சோறு புழு.

பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்?

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்.

பிள்ளை இல்லாதவன் வீட்டுக் கூரை கூடப் பொருந்தாதே. 16420


பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.

(பிழைப்பது மேல்.)

பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை.

பிள்ளை என்றால் பேயும் இரங்கும்.

பிள்ளைக்கா பிழுக்கைக்கா இடம்கொடுக்கப் போகாது.

பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் காசுக்கு அழுகிறான். 16425

(பணிச்சவன் பிணத்தைத் தூக்கி செல்பவன்.)


பிள்ளைக்காரி குசுவிட்டாய் பிள்ளைமேல் சாக்கு.

பிள்ளைக்கு அலைந்து மலநாயைக் கட்டிக் கொண்டது போல.

பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம் கொடுக்கக்கூடாது.

பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீனை சமைத்துக் கொடு.

பிள்ளைக்குப் பிள்ளைதான் பெறமுடியாது; மலத்துக்கு மலம் விடிக்க முடியாதா? 16430


பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான்.

பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே.

பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார்.

பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.

பிள்ளைகள் கல்யாணம், கொள்ளை கிடைக்காதா? 16435


பிள்ளை குலம் அழித்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?

பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?

(கிடையாது.)

பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா?

பிள்ளைதான் உயர்த்தி; மலம் கூடவா உயர்த்தி?

பிள்ளை திறத்தைப் பேள விட்டுப் பார். 16440