பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தமிழ்ப் பழமொழிகள்



பிள்ளை நல்லதுதான்; பொழுது போனால் கண் தெரியாது.

பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை.

(பிள்ளைப் பிணிக்கு.)

பிள்ளைப் பாசம் பெற்றோரை விடாது.

பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் அகமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும்.

பிள்ளைப் பைத்தியம் பெரும் பெத்தியக். 16445


பிள்ளைப் போதும் மழைப் போதும் யாருக்குத் தெரியும்?

பிள்ளை படிக்கப் போய் பயறு பசறு ஆச்சு,

பிள்ளை படைத்தவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.

பிள்ளை பதினாறு பெறுவாள் என்று எழுதியிருந்தாலும் புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?

பிள்ளை பாதி, புராணம் பாதி. 16450

(பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் லரலாறு பெரும்பகுதி.)


பிள்ளை பிறக்கும்; பூமி பிறக்காது.

பிள்ளைப் பிறக்கிறதற்கு முன்னே தின்று பார்; மருமகள் வருவதற்கு முன்னே பூட்டிப் பார்.

(மக்கள், மகள், கட்டிப்பார், போட்டுப் பார்)

பிள்ளை பிறந்த ஊ௫க்குப் புடைவை வேணுமா?

பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம்.

பிள்ளை பெற்றபின் அன்றோ பேரிட வேண்டும்? 16455


பிள்ளை பெற்றவளோ? நெல் எடுத்த குழியோ?

பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிந்து பயன் என்ன?

(ஆவது என்ன?)

பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டு அழுதது போல.

பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ?

பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை. 16460

(பெற்றுத் தாழ்ந்தவனும்.)


பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார்.

பிள்ளை பெற்றுப் பேர் இட வேண்டும்.

பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை.