24
தமிழ்ப் பழமொழிகள்
சோணாசலத்திற்குச் சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற் சிறந்த விரதம் இல்லை.
- (சோணாசலம்-திருவண்ணாமலை.)
சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும்.
சோதி பிறவாதோ? சம்பா விளையாதோ? 11650
- (சோதி-சுவாதி நட்சத்திரம்.)
சோதி மின்னல்.
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல்வானேள்? வாய் வலிப்பானேன் என்பானாம்.
சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத் துணை.
- (இல்லாத துணை.)
சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி முடம். 11655
- (மூடத்தனம்.)
சோம்பலே சோறு இன்மைக்குக் காரணம்.
- (பிரதானம்.)
சோம்பலே துன்மார்க்கத்திற்குப் பிதா,
சோம்பேறி அம்பலம் தீப்பற்றி எரியுதடா; அதைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் நோவானேன்?
சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது.
சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை. 11660
சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம்.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம்.
சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து.
சோமசுந்தரம், உம் சொம்பு பத்திரம். 11665
சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; சேர நாடு வேழம் உடைத்து.