பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ்ப் பழமொழிகள்


சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்னதை எல்லாம் கேட்பான். 11690

(இல்லாத பார்ப்பான்.)


சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?

சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா?

சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா?

சோற்றுக்கு ஏற்ற பலம்.

சோற்றுக்குக் கதிகெட்ட நாயே, பெரும் பொங்கல் அன்றைக்கு வாயேன். 11695


சோற்றுக்குக் கதி கெட்ட நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயேன்.

சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது.

சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.

சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வெட்ட வெளி.

சோற்றுக்குத் தாளம் போடுகிறான். 11700


சோற்றுக்கும் கறுப்பு உண்டு; சொல்லுக்கும் பழுது உண்டு.

சோற்றுக்கு வீங்கி.

சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம்போக வேண்டும்.

(போச்சம் பாளையம்-திருச் செங்கோட்டுக்கு அருகில் உள்ள ஊர்)

சோற்றுக்கே தாளமாம்; பருப்புக்கு நெய் கேட்டானாம்.

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா? 11705


சோற்றுச் சுமையோடு தொத்தி வந்த நொள்ளை.

சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை.

சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன்.

சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?

சோற்றைக் கொடுத்துத் தொண்டையை நெரிப்பபது போல. 11710


சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல

சோற்றை விடுவானேன்? சொல்லுக கேட்பானேன்?

(தூற்றை.)

சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம்.

(சோறு கண்ட இடம்.)

சோறு இல்லாமல் செத்தவன் இல்லை.

சோறு இல்லையேல் ஜோலியும் இல்லை. 11715